சேலம், மார்ச் 12- சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத் துள்ள தண்ணீர்தாசனூர் அருகே அரசு மது பானக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். எடப்பாடி, ஆலச்சம் பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகி யோர் தண்ணீர்தாசனூர் பகுதியில் அரசு மதுபான கடை அருகே உள்ள பாரில் வேலை செய்து வந்தனர். புதனன்று பூமணியூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவர் பாரில் மது அருந்த வந்த போது ராமமூர்த்தி, அண்ணாமலை இருவரிடமும் அனுமதி பெறாமல் பார் நடத்துவதாகக் கூறி அங்கி ருந்த ஸ்லாப் கல்லை துரைராஜ் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதை யடுத்து துரைராஜ் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கூலிப்படையினரை புதனன்று இரவில் அரசு மதுபான கடை பாருக்கு சென்று ராமமூர்த்தியை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராம்மூர்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர் அண்ணாமலையையும் தாக்கியபோது கூச்சலிட்டதும் 7 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தேவூர் போலீசாருக்கு அரசு மதுபான கடை ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, படுகாயமடைந்த அண்ணாமலையையும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத் தையும் ஏற்படுத்தியுள்ளது.