சேலம், மார்ச் 19- விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் குறித்து விவ சாயிகள் ஆட்சேபனை மனுக்களை வழங்க மேட்டூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் அதிகாரிகள் இல்லாததை கண்டித்து வியாழனன்று விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல கட்டமாக தங்கள் எதிர்ப்பை தெரி வித்தனர். இறுதியாக அரசு அதிகாரி கள் விவசாயிகளிடம் ஆட்சேபனை மனுக்கள் அளிக்குமாறு விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வியாழனன்று ஆட்சேபனை மனு அளிக்க மேட்டூர் வட்டாட்சியர் அலுவ லகம் வருகை தந்தபோது அங்கு மேட் டூர் வட்டாட்சியர் இல்லை. மேலும் மனுக்களையும் இப்போது வாங்க முடியாது என அலுவலக ஊழியர்கள் தெரிவித்ததால், ஆவேசமடைந்த விவசாயிகள் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த துணை வட்டாட்சியர் விவசாயிகளிடம் இருந்து 110 மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய ரசீதை வழங்கினார். மேலும் ஆட்சேபனை மனுக்களை ஐடிபிஎல் நிர்வாகத்திடம் வழங்குவ தாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித் ததன் பேரில், விவசாயிகளின் போராட் டம் கைவிடப்பட்டது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ராம மூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், சேலம் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.வசந்தி, மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விவ சாயிகள் பங்கேற்றனர்.