இளம்பிள்ளை, மார்ச் 25- வேம்படிதாளம், பெருமாகவுண்டம் பட்டி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உட்பட 13 பேர் சுகாதாரத்துறையினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே வசித்துவரும் நடராஜன் மகன் கணேஷ் பிரபு (28) இவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வரு கிறார். இவர் கடந்த 17ம் தேதியன்று வீட் டிற்கு வந்துள்ளார். இவர் வீட்டில் கணேச பிரபு உள்பட 10 பேர் வசித்து வருகின்ற னர். கணேஷ் பிரபுவின் விவரம் குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர கத்தில் இருந்து மாவட்ட சுகாதாரத் துறையி னருக்கு தகவல் வந்தன. இதனையடுத்து வீர பாண்டி வட்டார சுகாதாரத்துறையினர் இவ ரது வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டினர். இதன் பின்னர், இவரது உறவினர்கள் 9 பேரை 28 நாளைக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்கா ணித்து வருகின்றனர். இதேபோல் வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (58) மற்றும் அவரது மனைவி கோகிலா கோமதி (50) மற்றும் அவ ரது மகள் சரண்யா (25) ஆகியோர் ஜெர்மன் நாட்டிற்கு சென்று விட்டு கடந்த 15ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்தனர். இவர்களைக் கண்டறிந்து 28 நாளைக்கு தனிமைப்படுத் தப்பட்டு உள்ளனர். மேலும், இதேபோல் இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (35), மனைவி தேவிகா (30), மகன் தீபேஷ் ஆகியோர் கடந்த 14-ம் தேதி அன்று கொலம்பியாவி லிருந்து மகுடஞ்சாவடியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்திலிருந்து மகுடஞ்சாவடி சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் இந்த 3 நபர்களையும் தனிமைப்படுத்தி கண் காணித்து வருகின்றனர். இதனால் இளம் பிள்ளை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.