tamilnadu

img

முறைகேடாக குடிநீர் இணைப்பு தண்ணீர் இன்றி தவிக்கும் பொது மக்கள்

இளம்பிள்ளை, மார்ச் 8- இளம்பிள்ளை அருகே முறைகே டாக குடிநீர் இணைப்பால், குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வரு கின்றனர்.  சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சா வடி ஒன்றியத்திற்குட்பட்ட ஏகா புரம் மற்றும் தப்பக்குட்டை ஊராட்சி பகுதிக்கு மகுடஞ்சாவடி பகுதியில் இருக்கும் நீர் உந்து நிலை யத்திலிருந்து காவிரி குடிநீர் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இக்குழாய்களில் முறைகேடாக இணைப்பு ஏற்படுத்தி தண்ணீர் எடுத்து விவசாய தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இது போல் பல்வேறு பகுதிகளில் சட்டவி ரோதமாக குடிநீர்  எடுப்பதால்  ஏகா புரம் மற்றும் தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் தேக்க முடிய வில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  மேலும், காவிரி குடிநீர் குழாய் இருந்து ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியே றுகிறது. இதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், அதன் ஆபரேட்டர்களும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .  எனவே, முறைகேடாக குடி நீரை எடுப்பவர்களை  மாவட்ட நிர் வாகம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக் கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோ‌ரி‌க்கை விடு‌த்து‌ள்ளா‌ர்.