ஆத்தூர், மார்ச் 12- சேலம் தம்மம்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் உள்பட 15 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில் மாசி மகா திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தொடங்கி வைத் தார். அதை தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப் பட்டது. மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக் கட்டில் சீறிபாய்ந்து வந்த காளைகளை களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர். ஒரு சில காளை களை அடக்கிய வீரர்கள் பரிசு பொருட்களை அள்ளிச் சென்றனர். இந்த ஜல்லிக்கட்டில் தம்மம்பட்டி மட்டுமின்றி துறையூர், கரூர், சேலம் நாமக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் 640 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. 250 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாடு அடக்கும் வீரர் களுக்கு குக்கர், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம், சில்வர் பொருட்கள் என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த காளையின் உரிமை யாளர்களுக்கும், சிறந்த மாடு வீரருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 5 மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 15 பேர் காயம் அடைந்தனர். தம்மம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.