tamilnadu

img

வாரத்தில் 5 நாட்கள் பணியை அமல்படுத்திடுக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக. 16- வாரத்தில் 5 நாட்கள் பணியினை அமல்படுத்திடக் கோரி சேலம் ஐந்து ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிர்ணயித்த ஓய்வூதியத் திட்டமாக மாற்ற வேண்டும். வாரம் ஐந்து நாட்கள் பணியை அமல்படுத்திட வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை ரிசர்வ் வங்கிகளில் உள்ளது போல் மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஐந்து ரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் தீனத யாளன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

;