tamilnadu

img

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

இளம்பிள்ளை, பிப்.13- ஆட்டையாம்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவர் களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழ னன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி எம்.என்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வீரபாண்டி வட்டார பகுதியில் உள்ள 8 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்என்எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லோகேஸ்வரி வரவேற்றார். விழாவில் வீரபாண்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.மனோன்மணி கலந்துகொண்டு  1339 மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங் கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.  இவ்விழாவில் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் எஸ். வருதராஜ், எஸ்.பாப்பாரப்பட்டி  ஊராட்சி மன்ற  தலைவர்  ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள்  மனோகரன் (ஆட்டையாம்பட்டி), வரதராஜ் (இளம் பிள்ளை), பள்ளி  தலைமையாசிரியர்கள் விஜயராகவன்,  பழனிச்சாமி, குழந்தைவேலு, இளங்கோவன், கௌசல்யா தேவி, அமுதா, புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர்கள் பழனிசாமி,மாதேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;