நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தியும், தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வலியுறுத்தியும், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் கெங்கவள்ளி செயலா ளர் வெங்கடாஜலத்தை தாக்கிய அதிமுக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஓமலூர் காடையாம்பட்டியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, வட்ட செயலாளர் சின்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.