இளம்பிள்ளை, பிப்.8- வீரபாண்டி அருகே கொத்தனூர் கிரா மத்தில் பண்ணைப் பள்ளி வகுப்பு சனி யன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டா ரத்தில் கொத்தனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மருத்துவ பயிர்களின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பண்ணைப் பள்ளி வகுப்பு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாசுந்தரராஜன் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. பண்ணைப் பள்ளி என்பது விதை முதல் விதை வரை என்ற தத்துவத்தின் அடிப் படையில் மருத்துவ பயிர்களான தக்காளி மற்றும் சோற்றுக்கற்றாழையின் பருவம், ரகம் தேர்வு, நடவு, களைமேலாண்மை, உர மேலாண்மை, பூச்சிநோய் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி பயிர்களின் நிலைகளுக்கு ஏற்ப 6 வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பண்ணைப் பள்ளியின் முதல் வகுப்பு மருத்துவ பயிர்களான தக்காளி மற்றும் சோற்றுக் கற்றாழைக்கு ஏற்ற பருவம், ரகம், விதை நேர்த்தி மற்றும் நாற்றங்கால் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. இதில் மகுடஞ்சாவடி தோட்டக் கலை உதவி இயக்குனர் வி.சுதா சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு 25 விவசாயிகளை 5 குழுக்களாகப் பிரித்து பயிற்சி அளித்தார். இதில் உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் ஏ.வெள்ளியங்கிரி, என்.மாரியப்பன் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக விவசாயிகளுக்கு பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.