ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெற்கு காட்டுக்கொட்டாய் சுந்தரா புரத்தை சேர்ந்தவர் விவசாயி தினேஷ்குமார். இவர் தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூப்பறிக்கச் சென்ற போது கட்டுவதற்கு நூல் கேட்டுள்ளார். அப்போது அச்சிறுமியிடம் தினேஷ்குமார் தவறாக பேசியதாக கூறப்படுகிறது இது குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தினேஷ்குமாரிடம் கேட்டு உள்ளார். இதில் கோபமடைந்த அவர் 2018ஆம் ஆண்டு சிறுமியை வீட்டின் முன்பு வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் டவுன் காவல்துறையில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ கொலை வன்கொடுமை உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் வாலிபர் தினேஷ்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனை விதித்து நீதிபதி முருகானந்தம் பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அபராத தொகையை வழங்கவும் உத்தரவிட்டார்.