இளம்பிள்ளை, நவ. 4- இடங்கணசாலையில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை தற்போது பொதுமக்கள் வரு கையின்றி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூ ராட்சிக்குட்பட்ட காடையாம்பட்டியில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடை பெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கம் காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட வாரச்சந்தை தற்போது மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், காடையாம்பட்டி வாரச்சந் தையில் வியாபாரிகளும், மக்களும் குறை வாக வந்ததால் வெறிச்சோடி காணப்பட் டது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறு கையில், அருகிலுள்ள இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கி ழமை தோறும் வார சந்தை கூடுவது வழக் கம்.
ஆனால், தற்போது வரை அப்பகுதியில் தினந்தோறும் சந்தை செயல்படுவதால், காடையாம்பட்டி சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, காடையாம்பட்டி வார சந்தைக்கான குத்தகை காலம் கடந்த கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தற் பொழுது ரசீது வழங்கப்பட்டு வசூல் செய்யப் பட்டு வருகிறது. ஆனால், குறைந்த வியாபா ரிகளே வந்துள்ளதால் பேரூராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கிக் றனர்.