சேலம், அக்.4- சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளார். சேலம் மாவட்டத்தில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி ஆகியவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். காய்ச்சலால் அதிகரிப்பால் சேலம் அரசு மருத்துவ மனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டில்களுக்கு தனித்தனியாக கொசு வலை அமைக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இதில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர் களிடம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆட்சியர் சி.அ.ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் உள்பட மாவட்டம் முழு வதும் 44 பேர் டெங்கு காய்ச்சலாலும், 182 பேர் காய்ச்ச லாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் போலி மருத்துவர் களை அணுகாமல், அரசு மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.