சேலம், ஜூலை 30- தம்மம்பட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் கெங்கவல்லி வட் டார மருத்துவ அலுவலர் டாக்டர் வேலுமணி தலை மையில் தம்மம்பட்டி பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் துவங்கிய பேரணி உடையார் பாளையம், பேருந்து நிலையம், திருச்சி மெயின்ரோடு என முக்கிய வழித்தடம் வழியே சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி முதல்வர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, காவல் துறை ஆய்வாளர் ரகுவரன் முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள், சுகாதார செவிலியர்கள், டெங்கு களப்பணியா ளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.