tamilnadu

img

கொரோனா வைரஸ்: கோவில் விழாவிற்கு தடை

இளம்பிள்ளை, மார்ச் 21- கொரோனா வைரஸ் தொற்று பரவுதைத் தடுக்கும் நோக்கில், கோவில் விழாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகு தியில்  எட்டுப்பட்டி பெரியமாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளன. இக்கோயில்கள் இந்து அறநிலை துறை யின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது வான வேடிக்கை, தீ மிதித்தல், தேர்த் திருவிழா, வண்டி வேடிக்கை, பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், நாடகம், தெருக்கூத்து உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடைபெ றும். இந்த விழாவை காண இளம்பிள்ளை மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் வந்து செல்வார்கள். இந்த ஆண்டு விழாவிற் காக வழக்கம்போல் சுவாமி பூச்சாட்டு விழா 19ஆம் தேதி (செவ்வாய்) இரவு தொடங்கியது.  ஆனால் தற்சமயம் கொரோனா வைரஸ் நோய் பரவு வதைத் தடுக்கும் நோக்கில் விழாவானது ரத்து செய்யப்பட் டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் கடைகளோ, ராட்டி னங்களோ போடக்கூடாது. மேலும் கலைநிகழ்ச்சிகள், தேர்திருவிழா, தீமிதித்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக ளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து அற நிலை துறை அதி காரிகள் தெரிவித்தனர்.