tamilnadu

மதுபோதையில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் - வாலிபர் கொலை

ஓமலூர், மே 9- சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பு வாலிபர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் விஷ்ணுபிரியன் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். அச்சமயம் போதையில் தகறாரில் ஈடு பட்ட கும்பல் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.  இதில் படுகாயமடைந்த விஷ்ணுபிரியன்,  மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபாகணிகர் சம்பவ இடத் திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். முன்னதாக, ஒமலூர் காமலாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வியாழனன்று மது வாங்க டோக்கன் விநியோ கிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அப்பகுதியில் இளைஞர் ஒருவர் போதை கும்ப லால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

;