சேலம், மார்ச் 2- சேலம் உருக்காலையில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட பணியிடங் களை நிரப்பிடக்கோரி சிஐடியு சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலையில் 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள் ளதால் அதனை உடனடியாக நிரப்பிட வேண்டும். சம்பளப் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும். செயில் நிறுவனத்தில் ஒரே மாதிரி யான சம்பள முறையை ரத்து செய்ய வேண்டும். செயில் பங்குகளை விற் பனை செய்யக்கூடாது. தனியார்ம யத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சேலம் உருக்காலை தொழிற்சங்கத்தின் சார்பில் சேலம், மோகன் நகர், இரண்டாவது கேட் முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு உருக்காலை தொழிற்சங் கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.சண்முகம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.பன்னீர் செல்வம் பேசி னார். இதில் எண்ணற்ற உருக்காலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.