tamilnadu

வெற்று அறிவிப்பான சுற்றுலாப் பயணிகளுக்கான தடை அறிவிப்பு

ஏற்காடு, மே 31 - கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவ்வுத்தரவினை மீறி ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமே உள்ளனர். இதுவரை ஏற்காடு ஒன்றியத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், அரசின் தடை அறிவிப்பை மீறி ஏற்காட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து வண்ணம் உள்ளனர். இவர்கள் ஏற்காட்டில் நகரப் பகுதிகளை விடுத்து கிராமப் பகுதிகளில் உள்ள வாடகை பங்களாக்களில் தங்கியுள்ளதோடு, மாலை நேரங்களில் ஏரிக்கரையோரம் அமர்ந்து கூட்டம் கூட்டுவதை வாடிக் கையாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏற்காட்டை சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியதையடுத்து, சனி முதல் ஏற்காட்டின் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. 400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்காடு செல்ல முற்பட்டதாகவும் பின்னர் அவை திருப்பி அனுப்பட்டதாக ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ரகு கூறியுள்ளார்.