சேலம், அக்.2- சேலத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன் னிட்டு, கதர் சிறப்பு விற் பனை துவக்க விழா புத னன்று நடைபெற்றது. சேலம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண் ணாபட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் கதர்-கிராமத் தொழில்கள் (காதி கிராப்ட்) மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமை தாங்கினார். இதில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தினை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை குத்துவிளக் கேற்றி தொடக்கி வைத்து கதர் பொருட் களை பார்வையிட்டு முதல் விற்பனை யினை தொடங்கி வைத்தார். கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வாண்டும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலிட் டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதம் சிறப்பு தள்ளு படி அனுமதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் ரூபி அலிமாபாய் மற் றும் கதர் ஆய்வாளர் விஜயலட்சுமி உள் ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.