tamilnadu

img

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

ஏற்காடு, ஏப்.11- ஏற்காட்டில் 100 சதவிகித வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏரியில் சுற்றுலா துறை சார்பில் விளம்பர படகு விடப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏற்காடு படகு இல்ல ஏரியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏப்.18 ஆம் தேதியன்று அனைவரும் வாக்களிப்போம் என விளம்பரங்கள் பதாகைகள் அடங்கிய விளம்பர படகினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.ஷியாமலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏற்காடு வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;