tamilnadu

img

சேலம் அரசு மருத்துவமனையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 11 பேர் அனுமதி

சேலம், மார்ச் 24-  சேலம் அரசு மருத்துவமனையில் இந்தோனே சியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தொற் றால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனிசிறப்பு வார்டு கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை யில் சேலம் அரசு மருத்துவமனையில் இந்தோனே சியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அவர்கள் அனைவரும் தனி அறையில் தனி மைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அவர்களுக்கு தொற்று நோய் தாக்கியுள்ளதா என மருத்துவர்களிடம் கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோ தனை செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரி வித்தனர்.