tamilnadu

img

வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்றவர்கள் கைது

இளம்பிள்ளை , ஏப்.30-
கொரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் போதை பிரியர்கள் தாங்கள் வீட்டிலேயே  சாராயம் காய்ச்சி வருவதாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. இதனையடுத்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார், உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் பெருமாள் (54)என்பவரும், இடங்கணசாலை பகுதியை சேர்ந்த முத்து மகன் சங்கர் (34) என்பவரும் தங்கள் வீட்டில் சாராயம் தயாரிக்க ஆயத்த பணியில் இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்து  கைது செய்தனர்.