tamilnadu

img

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

சேலம், டிச.14- சேலம் பெரியார் பல் கலைக்கழகம்  சார்பில் வெள்ளியன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. டிசம்பர்.1ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாகும். இதையொட்டி சேலம் பெரியார் பல்கலைக் கழகம் சார்பில் பேரணி நடை பெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் பங் கேற்று  விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்கலைக் கழக பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பதிவாளர் (பொ) பேராசிரியர் கே.தங்கவேல், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி(பொ) எஸ்.கதிரவன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை  முனைவர் எம். சுகுணா, முனைவர் டி.இளங்கோவன் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.