tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை22- நூறு நாள் வேலை திட்டத்தில் முறை யாக வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் மேச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வேண்டும்.  குடிநீர் இல்லா ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும். மேலும் ஏப்.18 ஆம்  தேதியன்று (நாடாளுமன்ற தேர்தல்) நூறுநாள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண் டும். அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் எம்.கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.கணபதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாட்ட தலைவர் வி. தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டி செயலாளர் ஜி.மணிமுத்து பேசினார். இதில் நிர்வாகிகள் சின்ராஜ், எஸ்.வசந்தா, அம்பிகா, தவமணி உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.