tamilnadu

img

16 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் மோதி ஒருவர் பலி

ஆத்தூர் புதுப்பேட்டையில் பகுதியில் 16 வயது சிறுவன் ஓட்டிவந்த டிராக்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 16 வயது சிறுவன் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் அப்பகுதியில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இறைச்சி கடை வியாபாரி ஆறுமுகம் உயிரிழந்தார். மேலும் கடையில் இருந்த புரோட்டா மாஸ்டர் படுகாயம் அடைந்தார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.