tamilnadu

img

விடாமுயற்சியால் குடிமைப் பணி தேர்வில் வென்ற பீடித் தொழிலாளியின் மகள்!

சென்னை, மே 2- தனது விடாமுயற்சி காரண மாக, ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்றுள்ள, பீடித் தொழிலாளியின் மகள் இன்பாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\

‘குரூப் 1’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்  டத்தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி  பெற்றவர் என்ற செய்தி வெளியாகி  நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி யைப் பறைசாற்றியது.

இம்முறை குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் மிக வும் ஏழ்மையான நிலையில் தனது  சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே  படித்து வெற்றி பெற்றுள்ளனர் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண் ஊழியர்கள் ஒரே நேரத்தில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி  பெற்று அந்தப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

ஏழ்மையிலும் சாதனை
அதேபோல், தென்காசி மாவட் டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழி லாளி ஒருவரின் மகள் எஸ். இன்பா  என்பவர், ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏழ்மையான ஒரு பீடி  தொழிலாளியின் மகள். பொருளா தார வசதி இல்லாததால், வீட்டிலி ருந்தே படித்துள்ளார். இவர் ஏற்கெ னவே இரண்டு முறை ஒன்றிய அர சின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதி யும் தேர்ச்சி பெறவில்லை. எனி னும், இன்பா விடாமுயற்சியுடன்  மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்  அகில இந்திய அளவில் 851-வது இடத்தை பெற்றுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 7500 உதவித்தொகை பெற்று வந்த இன்பா, இத்தேர் வுக்கு படித்து வந்தார். 

மாநில அரசு நிதி உதவி
2023-ஆம் ஆண்டு ஒன்றிய அர சின் குடிமைப் பணிகள் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்  றதை அடுத்து மாதம் ரூ. 25,000 உதவித்தொகை பெற்றார். தமிழ்  நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்  டத்தின் மூலம் கிடைத்த உதவித் தொகையால் பொருளாதார தேவை பற்றிய கவலையின்றி இன்பாவால் முழு கவனத்துடன் இத்தேர்வுக்காக படித்து வெற்றி பெற முடிந்தது. 

படிப்புக்கு ஏழ்மை ஒரு தடை யில்லை, முயன்றால் படித்து முன்  னேறலாம். வெற்றி முகத்தைத் தொடலாம் என்பதை இன்றைய  இளைஞர்களுக்கு உணர்த்துவ தாக இன்பா வாழ்க்கையும், அவ ரது விடாமுயற்சியும் வழிகாட்டு கின்றன.

மே முதல் நாள் தொழிலாளர் திருநாள். பீடி சுற்றும் ஒரு தொழி லாளியின் மகள் இன்பா விடா முயற்சியுடன் படித்து, வென்று  உயர் அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் செய்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள் ளது. மே தின வாழ்த்துகள் இன்பா வுக்கும், அவருடைய பெற்றோருக்  கும் அனைவரும் கூறி பாராட்டு கிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.