tamilnadu

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சென்னை, டிச.8 - கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட தில்லியை சேர்ந்த  பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு தற்போதைய அதிமுக பொதுச்  செயலாளராக உள்ள எடப்பாடி பழனி சாமி, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்  நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற  வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி  சாட்சியம் அளிக்க இயலாது என்றும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு  செய்ய வழக்கறிஞர் ஆணையரை  நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதி மன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடை முறையை அவரது வீட்டில் மேற்கொள் வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் வெள்ளியன்று (டிச.8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதனடிப்படையில் ஆஜரா வதில் இருந்து விலக்கு கோரு கிறார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனி சாமி தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் காலில் ஏற்பட்டுள்ள  காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள்  ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோரப்பட்ட தாக தெரிவித்தார். உடல் நிலை காரணத்தை தவிர மற்ற காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை  என தெரிவித்த நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் சுட்டிக் காட்டினர். இதையடுத்து, இது குறித்து விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்டு விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.