tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாலிபர் சங்க  தண்ணீர் பந்தல் திறப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி சார்பில் தட்டாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று (மே 1) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் திறந்து வைத்தார். சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன், செயலாளர் கே.மணிகண்டன், பகுதித்தலைவர் ஹேமந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளி தற்காலிக பணியாளர்களுக்கு  மே மாத ஊதியத்தை வழங்க சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, மே 2- மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை பொதுத்தொழி லாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தண்டையார்பேட்டை மண்ட லத்தில் அதிகாரிகள் வாய்மொழி உத்தர வாக மாநகராட்சி பள்ளி துறையில் பணி புரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படாது என பள்ளி யின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழக முதல்வர் தற்போது ஊழி யர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறி வித்துள்ள இந்த நேரத்தில் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை அதிகாரிகள் செய்வது தொழி லாளர் வர்க்கத்திற்கு செய்யும் துரோக மாகும் எனவே உடனடியாக சென்னை மாநக ராட்சி மேயர் தலையிட்டு தொழிலாளர்களின் ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

காஞ்சிபுரம் மாவட்டம், பாலர் சங்கம் நத்தம்பேட்டை கிளைகள் சார்பில் மேதினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சங்கத்தின் கன்வீனர் சுஸ்மிதா தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் வி.சிவப்பிரகாசம், கே.சங்கர் ஆகியோர் பங்கேற்று மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கினர்.

பூந்தமல்லியில் தங்கிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

அம்பத்தூர், மே 2- பூந்தமல்லி அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி அருகே அகரமேல் பகுதியில்  வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அகரமேல் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் தனிப்படை காவல் துறையினர் பிடித்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   விசாரணையில் அவர்கள்  முகமது முகுல் (32), அவரது மனைவி குல்சன் அக்டர் (28), சலாம் ஹவ்லாடர் (55), அவரது மனைவி பாகுல் பேகம் (53), இப்ராகிம் ஹவ்லேடர் முதா போரீஷா (39), முகம்மது மிஜானூர் ரகுமான் மிது (43), முகமது மாரூப் ஹவ்லேடர் (20), முகமது மதுபசூல் (48) ஆகிய 8 பேரும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி சாலை ஓரங்களில் பழைய பொருட்களை சேகரித்து கடையில் விற்று கூலி வேலை செய்து வந்ததும், இவர்கள் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்ததும், போலியான ஆதார் கார்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து குன்கா என்ற பகுதிக்கு வந்தால், அங்கிருந்து கடற்கரையோரம் நடந்தே மேற்கு வங்க மாநிலம் வந்து விடுவதும், பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் தமிழகத்தில் தங்கிருந்த நாட்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிந்தார்களா அல்லது சதிச்செயல்களில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தார்களா எனவும் காவல் துறையினர் விசாரித்தனர். புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 8 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு  மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 33 பேரை காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான துறையில் சிறந்து  விளங்கும் பெண்களுக்கு  விருது  

சென்னை, மே 2- கட்டுமானம் தொடர்பான  டிஜிட்டல் தளமான மேஸ்திரி, கட்டிடவியல், பசுமை, கல்வி மற்றும் கட்டுமான தலைமை துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய பெண்களை கவுரவித்தது. அவர்களுக்கு மேஸ்திரி விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  உத்தாண்டியில் நடைபெற்றது. இதையொட்டி காபி டேபிள் புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். கட்டிடவியல், கல்வி மற்றும் மனிதவியல் நிபுணர், டாக்டர் குமுதவல்லிக்கும், கட்டுமானத்துறையில் தொழில்முனைவோராக உள்ள சங்கீதா மேனன்,  நலினி பபாலே சாஸ்கர்,  சுகன்யாகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மேஸ்திரி, 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறுகுறு நடுத்தர தொழிலில் அனுபவம் கொண்ட தொழில்முனை வர் எம். கமலா குமாரியால் நிறுவப்பட்டது. கட்டுமானத் துறையில் பெண்கள் மற்றும் சிறுகுறுநடுத்தர நிறு வனங்களை வலுப்படுத்தும் வகையில், மேஸ்திரி செயல்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு சலுகை  

சென்னை, மே 2-  உயர்செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ, அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025-க்கு சலுகைகளை அறிவித்துள்ளது. ஐக்யூஓஓ இசட்9 லைட், ஐக்யூஓஓ இசட்9எக்ஸ், ஐக்யூ ஓஓஇசட்9எஸ், ஐக்யூஓஓஇசட்10எக்ஸ், ஐக்யூஓஓஇசட்10, ஐக்யூஓஓநியோ10ஆர், ஐக்யூஓஓ12, மற்றும் சமீபத்திய ஐக்யூஓஓ13 உள்ளிட்ட இதன் மிகவும் பிரபலமான சில மாடல்களுக்கு கூடுதல் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த விற்பனை மே 1 பகல் 12 மணி முதல் துவங்கி உள்ளது. அமேசானில் சிறந்த செயல்திறன்மிக்க அதிக மதிப்பீடு பெற்ற 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலில் ஐக்யூஓஓ  ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து இடம்பிடித்து வாடிக்கையாளர் களின் மதிப்பீடுகளுடன் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.  

ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன்:  நிறுவனம் விவோ அறிமுகம்

சென்னை, மே 2-  2025:உலக அளவில் புதுமையான ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ தனது ஒய் மாடல் வரிசையில் புதிய ஒய்19 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஎச் ப்ளூவோல்ட் பேட்டரி மற்றும் ஒவ்வொரு தருணங்களையும் சிறப்பாக படம்பிடிப்பதை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமரா ஆகியவற்றை கொணடுள்ளது. தண்ணீர் மற்றும் தூசி உள்ளே புகாத வகையிலான ஐபி64 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.  4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கார்டுடன் வரிகள் உட்பட 10,499 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 11,499 ரூபாய்க்கும் மற்றும் 6ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 12,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

வாலிபர் சங்க  தண்ணீர் பந்தல் திறப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அண்ணாநகர் பகுதி, குஜ்ஜி தெரு கிளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று (மே 1) நடைபெற்றது. பகுதிச்செயலாளர் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பகுதி பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூரில் மேதின பொதுக்கூட்டம்

139ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு அம்பத்தூர், ஆவடி பகுதிக்குழுக்கள் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாவட்ட துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ், மாவட்ட துணைத் தலைவர் சு.பால்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன், இன் ஜினியரிங் சங்க உதவி தலைவர் எல்.பி.சரவணத் தமிழன், அ.ராயப்பன் (மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம்), ஆர்.கோபி (சிபிஎம்), ஆர்.முரளிக்குமார் (எச்விஎப்), தையல் சங்க மாவட்டத் தலைவர் ஜி.குணசேகர், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஏ.நடராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயல் தலைவர் ஏ.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.