கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜுன் 24) கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், மாவட்டப் பொருளாளர் ப.லோகநாதன், பகுதி நிர்வாகிகள் முனி ரத்தினம், வசந்த், எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் டிக்சன், மாதர் சங்கத்தின் தலைவர் காமாட்சி, சிஐடியு நிர்வாகிகள் சூரிய பிரகாஷ், குப்பன், விதொச மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.