சென்னையில் இந்தியன் வங்கியின் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச யோகா தினவிழாவில் வங்கியின் தலைவரும் தலைமை நிர்வாக இயக்குநருமான பத்மஜா சந்துரு கலந்து கொண்டு உரையாற்றினார். யோகா பயிற்சி மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். கிருஷ்ணமாச்சாரி யோகா மையத்னுடன் இணைந்து இந் நிகழ்ச்சியை இந்தியன் வங்கி நடத்தியது. இதில் வங்கியின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
**************************
உலக யோகா தினத்தையொட்டி அம்பத்தூர் புதூரில் உள்ள சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் பங்கேற்ற யோகா நடைபெற்றது. கண் குறைபாடுகள் உள்ள 8 மாணவர்களின் ஈடு இணையில்லா அர்ப்பணிப்பின் பங்களிப்பு அனைவரின் பாராட்டைப் பெற்றது. இதில் ராஜன் (துணைமேலாளர் - டாடா கன்சல்டன்ஸி) கலந்து கொண்டு யோகாவின் சிறப்புகளை விளக்கினார்.