tamilnadu

img

யானைகவுனி மேம்பாலம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறப்பு

சென்னை, ஜூலை 30- யானைகவுனி மேம்பாலம் ரூ.73 கோடி செலவில் அமைக்கும் பணி  நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட்  மாதம் முதல் வாரத்தில் திறக்கப்ப டும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர், அந்த வகையில் தற்போது ராஜா முத்தையா சாலை மற்றும் வால்டாக்ஸ் சாலை ஆகிய இரண்டையும் இணைக்கும் முக்கிய பாலமாக யானைகவுனி மேம்பாலம் அமைக்கப்பட்டது.

யானை கவுனி மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டதால் பாலத்தை இடித்து மீண்டும் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு தடை  விதிக்கப்பட்டு 50 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை ரயில்வே துறை யினர் பராமரித்து வந்தனர்.

பாலம் அமைக்க மாநகராட்சி சார்பாக மூலதன நிதியின் கீழ் சுமார் ரூ. 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதை தொடர்ந்து ரயில்வே துறை மூலம் ரூ.40 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.73 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

இந்த பாலம் இல்லாததால் சரக்கு  வாகனங்கள் அனைத்தும் பேசின் பலத்தை சுற்றிச் செல்லும் சூழல் நிலவி வருகிறது அதனால் வாகன ஓட்டிகள் மேம்பாலம் திறக்க வேண் டும் என கோரிக்கை வைத்து வருகின்ற னர். மேலும் பல்வேறு காரணங்களால்  மந்த நிலையில்  பணிகள் நடைபெற்று  வருகிறது. இதனால் கடந்த 2019ஆம்  ஆண்டு முதல் சுமார் 20 முறை ரயில்வே பொது மேலாளர் ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மேம் பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களவையிலும் இது தொடர் பாக பலமுறை குரல் எழுப்பப்பட்டது.  இந்நிலையில் ரயில்வே துறை பணிகள் முடிவடைந்து, தற்போது இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந் துள்ளது, யானைக்கவுனி பாலம்  முழுமையாக மக்கள் பயன்பாட் டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும்  இந்த பாலம் முழுமையாக செயல் பட்டால் வடசென்னை மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பு நிறைவேறும்.