சென்னை, மே 21- தொழிலாளர் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை கண்டித்து மே 22ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத் திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் நெருக் கடிகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கு மத்திய பாஜக அரசு நிவாரணம் ஏதும் வழங்கவில்லை. மாறாக நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை நீக்கி விடுவது, மூன் றாண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை முடக்கி வைப்பது, தொழிலாளர்களை வேலை அளிப்போர் களிடம் நவீன கொத்தடிமைகளாக்கும் அபாயகர மான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்து விட்டன. ஊதியத்தை வெட்டிக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றன. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு இன்று நடத்தும் கண்டன இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ் நாடு மாநிலக்குழு முழுமையாக ஆதரிக்கிறது. தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் பங்கேற்று ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.