tamilnadu

img

நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து போராடி வரும் நிலக்கரி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், போக்குவரத்துறையை தனியாருக்கு குத்தகை விடுவது, அரசுப் பேருந்துகளை இயக்காமல் தனியார் பேருந்தை வாடகை எடுத்து இயக்கும் முடிவை கைவிடக் கோரியும் செவ்வாயன்று (ஆக.18) தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மாநகரா போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஆறுமுகநயினார் (சிஐடியு), கி.நடராஜன் (எல்பிஎப்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), ராஜாஸ்ரீதர் (எச்எம்எஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் விழுப்புரம் தலைமையகம் மற்றும் கள்ளக்குறிச்சி பணிமனை முன்பு சிஐடியு, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.