கோயம்பேடு வணிக வளாக பிரச்சனைகளை தீர்க்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் நீலமேகம் தலைமையில் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று நிர்வாக அலுவலகத்தில் முறையிட்டனர். இதனையடுத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் வெங்கடபதியை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓய்வறை, குடிநீர் வசதி செய்து தரவும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.