கடலூர், மே 31-நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பணி புரிந்த மு.சுந்தர் சிஐடியு தொழிற்சங்க பகுதி நிர்வாகி , கூட்டுறவு நாணய சங்கத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந் நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதைய டுத்து பணி நிறைவு பாராட்டு விழா வட்டம் 10 கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு நெய்வேலி சங்கத்தின் தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி .ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு என்எல்சி பொதுச் செயலாளர் டி. ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் வி.முத்துவேல், ஐ.சங்கிலி பாண்டியன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகளும் தொழிலாளர்கள் ஊழியர்களும் சிஐடியு சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.நிகழ்ச்சியில் ஜானகி சுந்தர், மகன்கள் பரணிதரன், கார்த்திகா, ராஜா, ராஜராஜேஸ்வரியும் கலந்து கொண்டனர்.