சென்னை, மார்ச் 8- மகளிர் தினம் என்பது பெண்கள் மட்டும் கொண் டாடுவதாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண் டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடை பெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகை யில், “மங்கையராகப் பிறப் பதற்கே - நல்ல மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம். ‘அச்சமும் மட மையும் இல்லாத பெண் கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ - என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதா சன். பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒரு சமூகத்தை வழிநடத் துபவராக உயர்ந்து நிற்ப தையே நாமும் விரும்புகி றோம். ஏன் இந்த நாடும் விரும்பிக் கொண்டிருக்கி றது.
அத்தகைய பெண்க ளைத்தான் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார். அத்தகைய பெண்களை உருவாக்க ஊக்கம் தரும் நாள்தான் இந்த மகளிர் தினம்”என்றார். “நாட்டில் நடக்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை, தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது’’ என்று 1922 ஆம் ஆண்டு காந்தியடிகள் சொல்லக் காரணமானவர்கள் நாகம் மையாரும், கண்ணம் மாளும். இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துத்தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள் என்றும் அவர் கூறினார். இந்திதிணிப்பை எதிர்த்து நடத்தப் பட்ட போராட்டத்தில் அதி கமாக பெண்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். கைக்குழந்தைகளோடு பலர் கைதாகியிருக்கிறார்கள். தோள்சீலைப் போராட்டத் தின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழா மார்ச் 6 அன்று நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக இருந்த அடிமைத்தனத்தை, கொடூரத்தை துடைத் தெறியக் கூடிய சீர்திருத்தவாதிகளும், பெண்களும் கூட்டாகச் சேர்ந்து போராடியதன் விளைவுதான் இன்றைக்கு அனைத்து இடங்களிலும் பெண்கள் தலைநிமிர்ந்து நின்று கொண்டு இருக்கிறார் கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.