ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்பார்த்தது போலவே, ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, அதை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது என்று ஒன்றிய அரசு மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் இருந்து வரும் ரூ.2000 நோட்டை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில், பணமதிப்பிழப்பின் முட்டாள்தனமான முடிவை மறைக்கவே ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரூ.1000 நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.