சென்னை, ஆக.2- நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகிய ஆடி 18-அன்று டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆடிப்பெருக் கைக் கொண்டாடினர். தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப் பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள், பாவாடை தாவணி மற்றும் சேலை என பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் போது, ஒன்பது வகையான தானியங் களின் முளைகளால் நிரம்பிய மண் பானைகளை ஏந்தி, ‘முளைப்பாரி’ வழிபாட்டில் பங்கேற்றனர். வழக்க மாக நதிகளில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய நடைமுறையின் அடை யாளமாக - கல்லூரி வளாகத்தில் உள்ள சிறு குளத்தில் மாணவிகள் அகல் விளக்குகளில் தீபமேற்றி மிதக்க விட்டனர். மாணவிகள், எலுமிச்சை சோறு, புளியோதரை, தேங்காய் சாதம் என விதவிதமான உணவுகள் அடங்கிய ‘சித்ரா அன்னம்’ மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின் பண்டங்களை பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் உச்ச கட்டமாக, ‘நீரைச் சேமித்தல்’ என்கிற கருப்பொருளை மையப் படுத்தி மாணவிகளின் ‘கும்மி யாட்டம்’ நடைபெற்றது. ‘தப்பட்டம்’ ‘ஒயிலாட்டம்’ ‘மயிலாட்டம்’ ‘காவடி ஆட்டம்’ ஆகிய நாட்டுப்புற நடனங்களையும் மாணவிகள் ஆடி மகிழ்ந்தனர்.
இது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்தி ரன் கூறுகையில், “நதிகள் செழிப்பின் ஆதாரங்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு மிக முக்கிய மானவை. ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ் கலாச்சாரத்தில் நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், உலகம் முழுவதும் பரவியுள்ள சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கருத்தில்கொண்டு, நதி கள் மற்றும் பிற நீர்நிலைகள் மீதான மரியாதை, கடந்த காலத்தைவிட இன்றைக்கு மிக அதிகமாக தேவைப் படுகிறது. எனவே, எங்கள் கல்லூரி யில் ஆடிப்பெருக்கு விழாவை ஏற்பாடு செய்து நீர் பயன்பாடு, நீர் நிலைகளின் பாதுகாப்பு, அவற்றுக் குப் புத்துயிர் அளித்தல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அந்த விழாவுடன் தொடர் புடைய கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவிகளை ஊக்குவிக்கி றோம்” என்றார்.