tamilnadu

போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து ஓ.பி.எஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்... அமைச்சர் ராஜகண்ணப்பன் சாடல்.....

சென்னை:
கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து, துன்புறுத்தியது அதிமுக ஆட்சி என, முன்னாள் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பதிலடி கொடுத்துள் ளார்.இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடும் நிதி நெருக்கடியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாத ஊதியத்தை எவ்வித பிரச்சனையுமின்றி வழங்கியதை தொழிலாளர் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.திமுக ஆட்சி அமைந்த 20 நாட்களில், கொரோனா தொற்று உச்சக்கட்டத்திலிருந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 1.1.2020 முதல் 30.4.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்துப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலன் கருதி, பல்வேறு பணப் பலன்களாக ரூ.497.32 கோடியை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.தற்போது திமுக ஆட்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாகப் பணியாற்றி வருகின்றனர். உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவச் சான்றுகளின் பேரில் இலகுப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோரையும் பணி மாதல் செய்து துன்புறுத்தவில்லை. தொழிலாளர்களை, தொழிலாளர்களாகப் பாவிக்காத அரசு, அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி.

20 விழுக்காடு தீபாவளி போனஸை வழங்க மறுத்து, வெறும் 10 விழுக்காடு மட்டுமே வழங்கி துன்புறுத்தியது அதிமுக. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, முறையாக நடத்தப்பட வேண்டிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையைத் தொடராமல், ஒரு ஒழுங்கற்றப் போக்கை அதிமுக அரசுக் கடைப்பிடித்து, அதை காலங்கடத்தி, அதனால் தொழிலாளர்களின் உரிமையில் மண் அள்ளிப் போட்டது அதிமுக ஆட்சி.பணி ஓய்வுப் பெற்று பல்லாண்டுகளாகியும், அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்துப் பணப் பலன்களும் உடனடியாக வழங்காமல், பணத்தைப் பல்வேறு வகைகளில் சூறையாடியது அதிமுக ஆட்சி. இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்குச் சேர வேண்டிய பணப் பலன்கள் உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது, வாரிசுகளுக்கு வேலை வழங்காதது அதிமுக ஆட்சியில் தான்.ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசாமல், அதைத் தவிர்ப்பதற்காக உதிரிச் சங்கங்களை எல்லாம் ஊக்கப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திய போராட் டங்கள், ஆர்ப்பாட்டங்களை நசுக்கி, பணி மாற்றம் செய்து அலைய விட்டது மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்டது அதிமுக ஆட்சி.அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில், மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதலுக்கு ஒரு தொகை, பணிப் பதவி உயர்வுகளுக்கு ஒரு தொகை, அனைத்துப் பணிமனைகளிலும் ரூட் போஸ் டிங்குக்கு ஒரு தொகை, ஓ.டி.யில்  உலா வர ஒரு தொகை, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருமணம், வீடு கட்ட கடன் தொகை பெற ஒரு தொகை என எல்லாவற்றுக்கும் கல்லா கட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி.

தரமில்லாத உதிரி பாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங் கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடித்தது அதிமுக ஆட்சி. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமைய உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நல்லாட்சியில் குறைகள் கூற எவ்வித அருகதையும், தகுதியும், ஓபிஎஸ்ஸூக்கு இல்லை. தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியது அதிமுக ஆட்சியின் ஓபிஎஸ் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.தமிழக முதல்வராகவும், துணை முதல்வராகவும், நிதி அமைச்சரா கவும் இருந்த ஓபிஎஸ், கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, யாரோ எழுதி கொடுத்ததை கொடுத்து முதலை கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;