tamilnadu

கொரோனா பாதித்த வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? நீதிமன்றம்

சென்னை:
கொரோனா அறிகுறி இல்லாதவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? மேலும் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர்.மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.