சென்னை, டிச. 5 - சமூகச் செயற்பாட்டாளர் சுசீலா மாரடைப்பால் திங்களன்று (டிச.4) கால மானார். அவருக்கு வயது 45. அன்னாரது மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவப் பருவந் தொட்டே இடதுசாரி இயக் கங்களில் பங்கெடுத்து வந்தவரும், வழக்கறிஞரும், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான சுசீலா வின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
பன்முக ஆளுமையும், பரந்த நட்பு வட்டமும் தோழமையும் கொண்டவர் சுசீலா. இழப்புகளையும் சவால்களையும் தீரமுடன் எதிர் கொண்டவர். குழந்தை கள் நலன், பெண்ணுரிமை, தொழிலாளர் நலன் சார்ந்த பணிகளில் மிகுந்த ஈடு பாட்டுடன் செயல்பட்டு வந்த வர். பொது நிகழ்வுகளிலும் ஊடகங்களிலும் தனது கருத்துகளை வலுவாக முன்வைத்தவர்.
நாடக நடிகர், 2015 சென்னை பெருவெள்ளம், கொரோனா பொது முடக்கம் போன்ற நெருக்கடி யான நேரங்களில் பல்வேறு உதவிகளை மேற்கொண்ட வர். கடந்த இரண்டு நாட்க ளாக மிக்ஜம் புயலின் தொடர் மழையால் சென்னை சுற்று வட்டாரமே மூழ்கிக் கிடந்த நிலையில் கூட பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பல தகவல்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் இறப்ப தற்கு சற்று முன்பு வரை பரிதவிப்புடன் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார்.
தீவிர மாரடைப்பிற் காளாகி, இந்தப் பெரு மழையினால் உடனடி மருத்துவ உதவி பெற முடி யாமல் அகால மரண மடைந்தார். மருத்துவ ஆய்வுகளுக்காக தனது உடலை விட்டுச் சென்றுள் ளார். சமூகம் பயனுற வாழ்ந்தமைக்கான என்றென் றும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் வாழ்விணையர் விஜயா னந்த், மகன்கள் திலீபன், நந்தன் உள்ளிட்டோரின் துயரில் தமுஎகச பங்கெடுக் கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, விருகை பகுதிச் செயலாளர் இ.ரவி, தமுஎகச மாநில நிர்வாகிகள் ரோகிணி, கி.அன்பரசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மலர்விழி, பகத்சிங் கண்ணன், ஹேமா, மாவட்ட நிர்வாகிகள் அசோக் சிங், ராஜசங்கீ தன், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் தி.சந்துரு, இந்திய மாண வர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் சி.மிருதுளா உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அன்னாரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனைக்கு வழங்கப் பட்டது.