tamilnadu

விஷச் சாராய சாவுகள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சென்னை, ஜூலை 3- கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.  கோகுல்தாஸ் ஆணையம் மேற் கொள்ள வேண்டிய 4 முக்கியப் பணிகளை, தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில், ஜூன் 18 அன்று விஷச் சாராயம் குடித்து 65  பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்  மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்ப வம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசா ரணை மேற்கொண்டு வருகிறது.

அதில், தலைமைச் செயலாளர்,  ஒன்றிய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து  டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதி லளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்  பாக ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் ஆணையத்தின் 4  முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு  அரசின் அரசிதழில் வெளியிடப்பட் டுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி சம்ப வம் குறித்து முழுமையான விசா ரணை நடத்த வேண்டும். எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண் டும் நடைபெறாமல் இருக்க, மேற்  கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் குறித்து அரசுக்கு ஆலோச னைகளை வழங்க வேண்டும்.

சட்டவிரோத நடவடிக்கை களுக்கு மெத்தனால் பயன்படுத்தப்  படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர் பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண் டும். 

இதுபோன்ற சம்பவங்க ளால் பாதிக்கப்படும் குடும்பங்க ளுக்கான மறுவாழ்வு நடவடிக்கை கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.