கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்குடி பரங்கிப்பேட்டை லால்பேட்டை கடலூர் மங்கலம்பேட்டை நெல்லிக்குப்பம் விருத்தாசலம் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். இந்துத்துவா சக்திகளின் மதவெறி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களால் சிறுபான்மையினர் ஒருவித பாதுகாப்பற்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களில் பெரும்பகுதியினர் சாதாரண உழைப்பாளிகளாகவே உள்ள னர் அவர்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் வாழ்வா தார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ராகுழு தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்து க்கு உட்பட்டவர்களாக கருதி அவர்க ளுக்கு பட்டியல் இனத்தவருக்குஇட ஒதுக்கீடு மற்றும் உரிமைகள் வழங்கிட பரிந்துரைத்தும் இதுவரை ஏற்கப்பட வில்லை இதனால் கிருத்துவ தலித்துகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் எவ்வித விசாரணையுமின்றி 10 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை யில் வாடும் அவல நிலையும் உள்ளது சிறுபா ன்மையினரின் வாழ்வுரிமை வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. இப்பிரச்சி னைகளை மத்திய மாநில அரசுகள் உடன டியாக தலையிட வேண்டும். மேலும் சிறுபான் ்மை மக்கள் தங்களின் பட்டா இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைத்திட அனுமதி கபர்ஸ்தான், கல்லறை தோட்டங்களுக்கு நிலங்கள் வழங்குதல், சிறுபான்மையினர் வசிப்பிடங்களில் அடிப்படை பிரச்சினை களை தீர்த்தல், சச்சார் குழு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை குறி ப்பாக தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வழிவகை செய்தல், சிறையில் வாடும் இஸ்லாமிய விசாரணை கைதிகளை விடுதலை செய்தல், சிறுபான்மை மக்களின்கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட வாழ்வு ரிமை வழிபாட்டு உரிமை வாழ்வாதார உரிமையை பாதுகாத்திடவும் வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி டவும் தமிழக அரசு முன் வரவேண்டும். இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வடலூரில் சங்கமிக்கிறது.