tamilnadu

img

சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்: முதல்வர்

சென்னை:
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களில் கேரளா முதலிடம், தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:அயராத முயற்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவால் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.