tamilnadu

img

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அரசு அறிவிப்புகளை வெளியிடும் என்று நம்புகிறோம்

சென்னை, பிப். 21 - போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து புத னன்று (பிப்.21) தொழிலாளர் நல தனி ஆணையர் ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார் உள்ளிட்ட 27 சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது:

ஓய்வூதியர் வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்திருப் பது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆட்சியில் போடப்பட்ட 8 அர சாணைகளை ரத்து செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வேலை வழங்காமல் இருப்பதில் உள்ள பிரச்ச னைகளை வலியுறுத்தினோம்.

3 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கி 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வற்புறுத்தினோம். இது தொடர்பாக அரசிடம் பேசி தெரிவிப்பதாக தெரி வித்தனர். பணியில் உள்ள தொழி லாளர்களின் அகவிலைப்படி நிலுவை யை வழங்கவும், ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த பேச்சுவார்த்தை மார்ச் 6ஆம் தேதி மீண்டும் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கோரிக்கைகள் மீது அரசு சில அறிவிப்புகளை வெளியிடும் என்று நம்புகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.