வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். கே. நகர் பகுதிக்குழு சார்பில் 61 ஆயிரத்து 900 ரூபாய் நிவாரண நிதியாக வசூலிக்கப்பட்டது. இந்த தொகையை பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வழங்க மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் சேகர், சரவணன், ஜெயன், ஷாஜகான் ஆகியோர் உடனிருந்தனர்.