வயநாடு நிவாரண நிதிக்கு, ஓட்டுநர்களிடம் வசூலிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயை, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட கவுரவத் தலைவர் எம். சந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.கே. முருகேஷ் ஆகியோர் வழங்கினர். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டத் தலைவர் எம்.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியம், வி.தயானந்தம், எம்.வி.கிருஷ்ணன், பி சுந்தரம், பேபி சகிலா, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.உதயகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.