tamilnadu

img

வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு கேரள முதல்வரிடம் ரூ. 35 லட்சம்! அள்ளிக் கொடுத்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!

சென்னை, செப். 17 - நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வய நாடு மக்களுக்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) முப்பத்தைந்து லட்சத்து எண்ணூற்று ஐம்பத்து நான்கு ரூபாயை (ரூ. 35,00,854), நிவாரண நிதியாக அள்ளிக் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் கூட்டணியின் வட்டார, நகர, மாநகரக் கிளைகள் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட இந்த தொகையை, திருவனந்தபுரம் கேரள மாநில தலை மைச் செயலகத்தில் முதல்வர் பின ராயி விஜயனைச் சந்தித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாநிலத் தலைவர் மூ. மணி மேகலை, மாநில பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப் பொருளாளர் தா. கணேசன், துணைப் பொதுச்செயலா ளர் தே. முருகன், இந்தியப் பள்ளி ஆசி ரியர் கூட்டமைப்பு (STFI) அகில இந்தி யப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். டேவிட்ராஜன், கு. சுதா ஆகியோர் வழங்கினர்.

கடந்த செப்டம்பர் 11 அன்று நடை பெற்ற இந்நிகழ்வில் கேரள மாநில பள்ளி ஆசிரியர் சங்கத்தின் (KSTA) மாநில பொதுச்செயலாளர் பத ருண்ணிசா கலந்து கொண்டார்

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் (STFI) அகில இந்தியத் தலைவர் எச்.சி. ஹரி கிருஷ்ணன் மற்றும் கேரள மாநில பள்ளி ஆசிரி யர் சங்க மாநில நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக் குடி மாவட்ட மக்களுக்கு ஒரு கோடி  ரூபாய் அளவிற்கு உதவிப் பொருட் களை நேரடியாகச் சென்று கிராமம் கிராமமாக பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வழங்கியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோ னா கொடுந்தொற்றுக் காலத்தின் போதும், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப் பாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கான உதவிப் பொருட் களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜ யனிடம் ரூ. 10 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.