tamilnadu

img

கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர்: தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

அம்பத்தூர், ஆக. 23- புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் தொற்றுநோய் ஏற்ப டும் அபாயம் உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. பின்னர் அங்கி ருந்து செவ்வாப்பேட்டை பாக்கம், வெள்ளானூர், ஆரிக்கம்மேடு, செங்குன்றம் வழியாக கிருஷ்ணா கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. புழல் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் புழலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதி களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் பல  இடங்களில் வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கால்வாயில் விடப்படுகிறது. மேலும் இந்த வீடுகளில் உள்ள குப்பை, பிளாஸ்டிக், இறைச்சிக் கழிவுகளையும் கால்வாயில் கொட்டு கின்றனர். இதனால் கால்வாயில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் உற்பத்தியாகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு சார்பில் ஆந்திர முதல்வரிடம் கிருஷ்ணா நீர் கேட்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு கிடைத்தால் தண்ணீர் வரும் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீர், குப்பைகளுடன் புழல் ஏரிக்கு வரும். அப்போது ஏரி நீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும். இதுகுறித்து பொதுப்பணித் துறை  அதிகாரிகளிடம் பலமுறை புகார்  அளித்தும் இதுவரை கழிவுநீர் கலப்பதை தடுக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என சமூக ஆர்வ லர்கள் கூறுகின்றனர். மேலும் உட னடியாக அதிகாரிகள் கிருஷ்ணா கால்வாய் செல்லும் பகுதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தண்ணீர் மாசடைவதுடன் தொற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்க முடியாது என்றனர்.

;