திருவொற்றியூர்,பிப்.12- வடசென்னை கடல் பகுதியான ராயபுரம், காசிமேடு, மீன்பிடித்துறைமுகம் நல்ல தண்ணி ஓடை குப்பம், குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகைத் தொட்டிக் குப்பம், கே.வி.கே. குப்பம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிக்கும் நபர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுபற்றி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள். இதையடுத்து உயிர் பலியை தடுக்கும் வகையில் அப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் பகுதியில் குளிக்க தடை விதித்து 7 இடங்களில் எச்சரிக்கை பலகையை காவல்துறை யினர் வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போது ரோந்து வாகனத்தின் 93940 39108, 93840 39109 ஆகிய செல்போன் எண்களை கொடுத்து சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் யாராவது அத்துமீறி குளித்தால் உடனடியாக குறிப்பிட்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி தெரிவித்தனர். இதற்காக கடலோர பகுதியில் வசிக்கும் 10 பேர் கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.