tamilnadu

img

சென்னையில் நிறுவப்படும் வி.பி.சிங் சிலை!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அறிவிப்பு.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான வி.பி சிங் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி தற்போது உள்ள 27 % இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தியவர்.
இவரது நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.