முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அறிவிப்பு.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான வி.பி சிங் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி தற்போது உள்ள 27 % இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தியவர்.
இவரது நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.